தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினி டைம்ஸ் எண்டர்டெய்மென்ட் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் கேளடி கண்மணி. ஓ.என்.ரத்னம் இயக்கி வரும் இந்த தொடரில் அர்ணவ், கிருத்தியா கிருஷ்ணன், சாதனா, சாந்தி வில்லியம்ஸ், ராமச்சந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இதில் நாயகனாக நடித்து வரும் அர்ணவ் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான நடிப்பையும் வெளிப்படுத்தி கைதட்டல் பெற்று வருவதால், அவரை அடுத்தபடியாக மெகா சீரியல்களில் புக் பண்ண சில நிறுவனங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அர்ணவ், கேளடி கண்மணி தொடரை தவிர புதிய தொடர்களில் கமிட்டாகும் ஐடியா இல்லை என்று தவிர்த்து வருகிறார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். ஆனால் சினிமா வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. அதனால் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் வரை சீரியல்களில் நடித்து திறமையை வளர்த்துக்கொள்வோம் என்றுதான் கேளடி கண்மணி சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறேன். ஆனால், எனக்கு மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது. மீதமுள்ள 20 நாட்களும் ஓய்வாகத்தான் இருக்கிறேன். அதனால் இந்த இடைவெளியில் சினிமாவில் என்ட்ரியாகி விட வேண்டும் என்றுதான் படங்களுக்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
மேலும், இந்த நேரத்தில் பல சீரியல்களில் கமிட்டாகி விட்டால், சினிமாவில் நடிக்க நேரம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும், இப்போதைக்கு கேளடி கண்மணி ஒன்றே போதும் என்று தேடி வரும் சீரியல் வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன் என்கிறார் அர்ணவ்.