இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத அங்கமாக இருந்தவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடித்தவர். அதிகம் பேசாதவர், அதிக சர்ச்சைகளில் சிக்காதரவர், தெய்வ பக்தி நிறைந்தவர். தான் உண்டு. தன் வேலையுண்டு என்ற இருப்பவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தன் காலம் முடிந்து விட்டது என்று ஒதுங்கி இருக்காமல் அம்மா கேரக்டர், அண்ணி கேரக்டரில் நடித்து, சின்னத்திரையிலும் கால்பதித்தவர்.
சரிகம நிறுவனம் தயாரித்த ராஜ ராஜேஸ்வரி தொடரில் நடித்தவர் அதன் பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது அதே சரிகம இண்டியா நிறுவனம் தயாரிக்கும் பைரவி தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த தொடர் ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது திகில் தொடர்தான் என்றாலும் கே.ஆர்.விஜயாக நடிப்பது தெய்வாம்சம் நிறைந்த ஒரு பகுதியில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"நடிப்பு எனக்கு சுவாசம் மாதிரி. அது இல்லாமல் என்னால் வாழ முடியாது. வீட்டில் எனக்கென்று சில பொறுப்புகள் இருந்தது. அதனால் சில காலம் கொஞ்சம் விலகி இருந்தேன். முன்பு ராஜ ராஜேஸ்வரி தயாரித்த அதே நிறுவனம் நடிக்க அழைத்துபோது வந்து விட்டேன். இந்த நிறுவனம் எனக்கு பழக்கமானது. நல்ல தயாரிப்பாளர், இயக்குனர். ஸ்கிரிப்டிலேயும் சரி, அதை காட்சிப்படுத்துவதிலேயும் சரி சரியாக செயல்படுகிறவர்கள். அதனால் நான் நடிக்க வந்திருக்கிறேன். கடைசி மூச்சு உள்ளவரை நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை கடைசிவரை நடித்துக் கொண்டே இருப்பேன்" என்கிறார். கே.ஆர்.விஜயா.