ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத அங்கமாக இருந்தவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடித்தவர். அதிகம் பேசாதவர், அதிக சர்ச்சைகளில் சிக்காதரவர், தெய்வ பக்தி நிறைந்தவர். தான் உண்டு. தன் வேலையுண்டு என்ற இருப்பவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தன் காலம் முடிந்து விட்டது என்று ஒதுங்கி இருக்காமல் அம்மா கேரக்டர், அண்ணி கேரக்டரில் நடித்து, சின்னத்திரையிலும் கால்பதித்தவர்.
சரிகம நிறுவனம் தயாரித்த ராஜ ராஜேஸ்வரி தொடரில் நடித்தவர் அதன் பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது அதே சரிகம இண்டியா நிறுவனம் தயாரிக்கும் பைரவி தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த தொடர் ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது திகில் தொடர்தான் என்றாலும் கே.ஆர்.விஜயாக நடிப்பது தெய்வாம்சம் நிறைந்த ஒரு பகுதியில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"நடிப்பு எனக்கு சுவாசம் மாதிரி. அது இல்லாமல் என்னால் வாழ முடியாது. வீட்டில் எனக்கென்று சில பொறுப்புகள் இருந்தது. அதனால் சில காலம் கொஞ்சம் விலகி இருந்தேன். முன்பு ராஜ ராஜேஸ்வரி தயாரித்த அதே நிறுவனம் நடிக்க அழைத்துபோது வந்து விட்டேன். இந்த நிறுவனம் எனக்கு பழக்கமானது. நல்ல தயாரிப்பாளர், இயக்குனர். ஸ்கிரிப்டிலேயும் சரி, அதை காட்சிப்படுத்துவதிலேயும் சரி சரியாக செயல்படுகிறவர்கள். அதனால் நான் நடிக்க வந்திருக்கிறேன். கடைசி மூச்சு உள்ளவரை நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை கடைசிவரை நடித்துக் கொண்டே இருப்பேன்" என்கிறார். கே.ஆர்.விஜயா.