சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சின்னத்திரையில் குக் வித் கோமாளி முதல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் புகழ். அதோடு, பல திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்ததை அடுத்து அவரது நினைவிடத்தில் நேற்று நடிகர் புகழ் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, கேப்டன் ஐயாவின் மறைவுக்கு ஏற்கனவே நான் அஞ்சலி செலுத்தினேன். இன்று மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததின் காரணம் பசி என்று வருபவர்களுக்கு வயிறார உணவளித்து அவர் வழி அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன்.
நான் கூட சென்னைக்கு வந்த போது பக்கோடா, வாட்டர் பாட்டில் மட்டும் தான் மதிய உணவாக சாப்பிட்டு இருந்தேன். இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்தோடு இன்று முதல் சென்னை கே.கே நகரில் உள்ள எனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப் போகிறேன். முதலில் 50 பேர் என்று ஆரம்பித்து நாளடைவில் அதை அதிகரிக்க போகிறேன். இது குறித்து விரைவில் விரிவான வீடியோ வெளியிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் புகழ்.