Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எந்த ஒரு வெற்றியையும் தலைக்கு ஏற்றிக்கொள்ள கூடாது: சமுத்திரகனி

23 செப், 2012 - 17:26 IST
எழுத்தின் அளவு:

நடிகனாக இயக்குநராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு ஜெயித்து காட்டியவர் சமுத்திரகனி. பாலசந்தர், அமீர், சசிகுமார் என்று அவரின் திறமைக்கான அடையாளங்களுக்கு மெருகு போட்டவர் பலர். இப்போது வாத்தியார் என்ற முறுக்கு மீசையோடு, புதுமுக இயக்குநர் அன்பழகனின் இயக்கத்தில், சமுத்திரகனியின் அசத்தலான நடிப்பு, அனைவரையும் அவரவர் வாத்தியாரை நினைவுப்படுத்தி உள்ளது. அழகான மதிய வேளையில் கனியுடன் ஒரு சந்திப்பு...

நெறஞ்ச மனசு படம்மூலம் சினிமா அறிமுகம், சின்னத்திரை பெரியதிரை என்று அத்தனையிலும் நான் பயின்ற சினிமா என்னை ஒவ்வொரு நாளும் ஏதோ புதிய ஒன்றை கற்றுக்கொள்ள வைத்தது. நான் என் கதையை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அலுவலகத்திலும் வாய்ப்பு கேட்டு அலைந்ததை ஒருநாளும் மறக்க முடியாது. அதை இப்போதும் நினைத்தாலும் கண்ணீர் வரும். சினிமாவில் ஜெயிக்க வலிகளை அதிகம் பொறுத்து கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பிற்கு நிச்சயம் ஒருநாள் பலன் உண்டு. சுப்ரமணியபுரம், நாடோடிகள் என்னை மேலும் அடையாளப்படுத்தின. இப்போது பள்ளிக்கூட வாத்தியாராக என் பயணம் தொடரும் படம் சாட்டை.

இந்தபடத்தின் கதை கேட்கும் போதே நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு பிரபுசாலமனுக்கு தான் நன்றி சொல்கிறேன். சாட்டை படத்தில் நடித்த போது என் வாத்தியார் தான் எனக்கு நினைவுக்கு வந்தார்கள். 7ம் வகுப்பிலேயே நான் வகுப்பு நோட்டில் கதை எழுத தொடங்கிவிட்டேன். அதுவும் ஆங்கில நோட்டில். இப்படியாக என் பயணம் தொடங்கியது. சாட்டை படத்தில் தயாளன் என்ற ஆசிரியர் எப்படி இருக்கணும் என்று இயக்குநர் மனதில் வைத்திருந்த‌ாரோ அதை அப்படியே செய்தேன். எந்த கேள்வியும் கேட்கல. சொல்லப்போனால் நான் சட்டையை இன்ஷெர்ட் பண்ணமாட்டேன். அது என்னுடைய பழக்கம். ஆனால் இந்தபடத்தில் சட்டையை இன் பண்ணி ஒரு நேர்மையான வாத்தியாராக எப்படி இருக்கணுமோ அதை போல இருந்தேன்.

சினிமாவில் கதை களம் சமுகத்துக்கு ரொம்ப முக்கியம். அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை வைத்து ஒரு அழகான கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர். இந்தபடம் இப்போதைய தேவை. மேலும் படம்பார்த்த பலரும் எனது நடிப்பை பாராட்டி பேசுகின்றனர். ஒன்றுமட்டும் சொல்கிறேன். எந்த வெற்றியையும் தலைக்கு ஏற்றி கொள்ள கூடாது என்பது என் விருப்பம். செய்யும் வேலையை பார்த்தாலே போதும். நான் பிறவி நடிகன் அல்ல, ‌ஏதோ என்னால் முடியும் என்று நடிக்க கூப்பிடுகிறார்கள், நானும் செய்து பார்க்கிறேன். சாட்‌டை படத்திற்கு அடுத்து சீனுராமசாமியின் நீர்ப்பறவை படத்தில் நடித்து வருகிறேன். போராளி படத்தை கன்னடத்தில் புனித், பாவனாவை வைத்து இயக்கி வருகிறேன். இந்தப்படம் முடியும் நிலையில் உள்ளது. அடுத்து ஜெயம் ரவி-அமலாபாலை வைத்து நிமிர்ந்து நில் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகிறேன். இன்னும் ஒருபாட்டு மட்டுமே உள்ளது. இப்படியாக என் படைப்பு பயணம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது.

எனக்கு 100 படம் நடிக்க வேண்டும் என்று ஆசையில்லை, சமூகத்துக்காக நடித்தாலே போதும் என்று ஆசைப்படுபவன் நான். இப்போது தமிழ் சினிமாவில் நிறைய புது கதைகளோடும், புதுமுகங்களோடும் வருவது வரவேற்கத்தக்கது. நான் அடுத்து பிலிம் பார்ம்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளேன். அநேகமாக சாட்டை இயக்குநர் அன்பழகன் அடுத்து இயக்க போகும் படம் எனது தயாரிப்பில் தான் இருக்கும் என்று பேசி முடித்த சமுத்திகனியின் கண்களில் ஆயிரம் நம்பிக்கைகளை பார்க்க முடிந்தது.

உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் கனி...!!

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

கனி - Madurai,மாடகஸ்கர்
25 செப், 2012 - 02:00 Report Abuse
 கனி தலைக்கு ஏத்தகூடாது கனி ஆனா காலுக்கு ஏத்தலாம்...
Rate this:
janani - bangalore,இந்தியா
24 செப், 2012 - 18:25 Report Abuse
 janani i லைக் samuthirakani
Rate this:
வீரகௌரிபிரபு - பெங்களூர்,இந்தியா
24 செப், 2012 - 15:05 Report Abuse
 வீரகௌரிபிரபு ஒரு நல்ல படத்திற்கான அனைத்து தகுதிகளுடன் வந்திருக்கும் படம். சமுத்திரகனி, தம்பி ராமையா என அனைவரும் நடிக்காமல் வாழ்ந்து இருக்கின்றார்கள். நல்ல சிந்தனை உள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
கமல்ராஜ் ஆ - KUMBAKONAM,இந்தியா
24 செப், 2012 - 14:11 Report Abuse
 கமல்ராஜ்   ஆ எந்த ஒரு வெற்றியையும் தலைக்கு ஏற்றிக்கொள்ள கூடாது. இந்த வரி எல்லா நடிகருக்கும் ஒரு நல்ல எடுத்துகாட்டு .பெஸ்ட் ஆப் லக் சமுத்திரகனி
Rate this:
ram - chennai,இந்தியா
23 செப், 2012 - 22:18 Report Abuse
 ram nee manithan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in