கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் | பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் |
அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் பரத் கூறியுள்ளார். கிசுகிசுவில் அடிபட்டுக் கொண்டிருக்கும் நடிகர்களின் முக்கியமானவர் நடிகர் பரத். இவர் நடித்த திருத்தணி படம் விரைவில் வரவிருக்கிறது. இதை விட இவர் பெரிதாக நம்புவது சசி இயக்கி வரும் 555 படத்தைத்தான். கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தை சுற்றி பரத் பற்றிக் கிளம்பியுள்ள லேட்டஸ்ட் கிசுகிசு நடிகை சஞ்சனாவுக்கும், இவருக்கும் காதல் என்பதுதான்.
இந்த கிசுகிசுக்களை மறுத்துள்ள பரத், இந்த கிசுகிசுவில் உண்மை எதுவும் இல்லை. உண்மையில் நான் நிறைய பெண்களுடன் பழகுகிறேன். ஆனால் யாருடனும் காதல் இல்லை. இவர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் என்னுடன் நடித்த சீனியர் நடிகை ஒருவருடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள். இதற்கெல்லாம் மறுப்பு சொல்வது வீண் வேலை. எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். இன்னும் எனக்கான இடத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறேன், என்று கூறியுள்ளார்.