விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் | பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் | பிளாஷ்பேக் : மேற்கத்திய நடனங்களிலும் கலக்கிய லலிதா, பத்மினி | ஹீரோயின் ஆனார் முல்லை அரசி | வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு |
டைரக்டர் மிஷ்கினுக்கும், தனக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை, என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த முகமூடி படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் வசூல் தேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மிஷ்கினுக்கும், ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின. இதனை ஜீவா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மிஷ்கினுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல் செய்திகள் பரவி உள்ளன. எங்களுக்குள் எந்த மனக்கஷ்டமும் இல்லை, என்று கூறியுள்ளார். முகமூடி குறித்த விமர்சனங்கள் பற்றி கூறுகையில், முகமூடி படம் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக உள்ளார். விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் சிலர் விமர்சித்துள்ளனர். அதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், ரசிகர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிகபட்சம் 70 சதவீதம் பேரை திருப்திப்படுத்தலாம். மிச்சம் உள்ளவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அடுத்த படங்களில் என்னை விமர்சிப்பவர்களும் விரும்பும் வகையில் நடிப்பேன், என்றார்.