மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
டைரக்டர் மிஷ்கினுக்கும், தனக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை, என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த முகமூடி படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் வசூல் தேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மிஷ்கினுக்கும், ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின. இதனை ஜீவா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மிஷ்கினுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல் செய்திகள் பரவி உள்ளன. எங்களுக்குள் எந்த மனக்கஷ்டமும் இல்லை, என்று கூறியுள்ளார். முகமூடி குறித்த விமர்சனங்கள் பற்றி கூறுகையில், முகமூடி படம் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக உள்ளார். விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் சிலர் விமர்சித்துள்ளனர். அதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், ரசிகர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிகபட்சம் 70 சதவீதம் பேரை திருப்திப்படுத்தலாம். மிச்சம் உள்ளவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அடுத்த படங்களில் என்னை விமர்சிப்பவர்களும் விரும்பும் வகையில் நடிப்பேன், என்றார்.