கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் | பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் |
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகும் ஒவ்வொரு நடிகைக்குமே அடுத்து பாலிவுட்டில் கொடியேற்ற வேண்டும் என்பதுதான் தீராத கனவாக இருக்கும். அந்த வரிசையில் ஸ்ரீதேவிக்கு பிறகு பல நடிகைகள் இங்கிருந்து இந்தி சினிமாவுக்கு சென்றதில் அசின் பெரிய அளவில் தற்போது புகழ் பெற்றிருக்கிறார். அதனால் அடுத்தடுத்து காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகள் இந்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் நண்பன் படத்தில் நடித்த இலியானாவும் அந்த படத்தை முடித்த கையோடு இந்தியில் ரன்பீர்கபூர் நடித்த பர்பி படத்தில் நடித்தார். படம் வெற்றி பெற்றதோடு, இலியானாவின் நடிப்பும் அங்குள்ளவர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இதனால் மேலும் புதிய படங்களை கைப்பற்றும் அதிரடி முயற்சியில் இறங்கியிருக்கும் அவர், இனி அசினைப்போன்று மும்பையிலேயே செட்டிலாகி முழு நேர இந்தி நடிகையாகப்போவதாக கூறுகிறார்.