பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
பழம்பெரும் நடிகர் பெரியகருப்பு தேவர், சென்னையில் நேற்று, மாரடைப்பால் இறந்தார். இவருக்கு வயது,78. " பூ, விருமாண்டி, சிவகாசி, திருப்பாச்சி உட்பட, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கலைமாமணி விருது பெற்றுள்ளார். சென்னை சாலிகிராமத்தில், அவர் வீட்டில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார். இவர் உடலுக்கு, திரையுலகத்தினர் பலர், அஞ்சலி செலுத்தினர். இவருக்கு, அன்னம்மாள் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். பெரியகருப்பு தேவரின் உடல், சென்னையிலிருந்து நேற்று இரவு, அவரது சொந்த ஊரான, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள, கருமாத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று, இறுதிச் சடங்கு நடக்கிறது.