இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ஜெயம் ரவி, நடிகை ராக்ஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்தப் படம் 'அடங்க மறு'. கடந்த 21ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன; அதனால், படத்தில் இருந்து அப்படிப்பட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டு, வழக்கறிஞர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதிகள், வரம் ஜனவரி 2வது வாரத்துக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர். இதனால், சிக்கலில் இருந்து அந்தப் படம் தப்பித்தது. காரணம், ஜனவரி இரண்டாவது வாரம் பொங்கல் வருகிறது.
பொங்கலை ஒட்டி 'விஸ்வாசம்', 'பேட்ட' உள்ளிட்ட பல படங்கள் ரிலீசாகின்றன. அதற்காக, பல தியேட்டர்களில் இயற்கையாகவே 'அடங்க மறு' படம் தூக்கப்பட்டு விடும். அதுவரை தான், 'அடங்க மறு' படமே ஓடும் என்பதே யதார்த்தமாக இருப்பதால், அதன்பின், என்ன தீர்ப்பு வந்தாலும், 'அடங்க மறு' படத்துக்கு பாதிப்பு இருக்காது.