Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நில மோசடி வழக்கு : வடிவேலு, சிங்கமுத்து சமரசம்

27 ஜூலை, 2018 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Land-issue-case-:-Vadivelu---Singamuthu-Compramise

வடிவேலுவின் காமெடி டீமில் இருந்தவர் நடிகர் சிங்கமுத்து. தற்போது தனியாக நடித்து வருகிறார். வடிவேலுவிடம் இருந்தபோது அவருக்கு பல சொத்துக்களை வாங்கிக் கொடுத்தார் சிங்கமுத்து. அவர் வாங்கிக் கொடுத்த நிலம் ஒன்றின் காரணமாக வடிவேலுக்கும், சிங்கமுத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர். ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ராமச்சந்திரன் என்பவர் தனது 34 செண்ட் நிலத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாததால் நிலம் ஏலத்துக்கு வந்தது. அதனை பழனியப்பன் என்பவர் ஏலத்தில் எடுத்தார்.

பழனியப்பன் வசம் நிலம் இருக்கும்போதே உரிமையாளர் ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது உறவினர்கள், அந்த இடத்தை விற்கும் உரிமத்தை நடிகர் சிங்கமுத்துக்கு வழங்கினர். அவர் அதனை வடிவேலுக்கு விற்றார். இதனால் நிலத்தை ஏலம் எடுத்த பழனியப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வடிவேலுவும் போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் நிலத்தை விற்றதாக கூறி 3 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வடிவேலுவும், பழனியப்பனும் ஆஜர் ஆனார்கள். நிலப் பிரச்சினையில் தாங்களே பேசி சமரசம் செய்து கொண்டதாகவும், இருதரப்பும் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தனர். இதனால் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in