‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
விஷாலை வைத்து 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' முதலான படங்களை இயக்கிய திருவுக்கு, இதுவரை கமர்ஷியல் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் விஷால்.
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என பொறுப்புகள் வந்ததால் நடிப்பில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் அவர் ஒப்புக் கொண்ட படங்களே இன்னும் முடியவில்லை. எனவே விஷாலுக்காக காத்திருந்தால் இன்னும் இரண்டு வருடங்கள் வீணாகிவிடும் என்பதால், அந்தக் கதையை அப்படியே கௌதம் கார்த்திக்கிடம் சொன்னார்.
திரு சொன்ன கதை கௌதமுக்குப் பிடித்துப்போக, நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். திரு இயக்கும் அந்தப் படத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் அப்பா மகனாக நடிக்கின்றனர்.
இந்தப்படத்தில் கார்த்திக் நேர்மையான அரசு அதிகாரியாக நடிக்கிறாராம். வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா கெஸன்ட்ரா இப்படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.