இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஷாலை வைத்து 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' முதலான படங்களை இயக்கிய திருவுக்கு, இதுவரை கமர்ஷியல் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் விஷால்.
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என பொறுப்புகள் வந்ததால் நடிப்பில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் அவர் ஒப்புக் கொண்ட படங்களே இன்னும் முடியவில்லை. எனவே விஷாலுக்காக காத்திருந்தால் இன்னும் இரண்டு வருடங்கள் வீணாகிவிடும் என்பதால், அந்தக் கதையை அப்படியே கௌதம் கார்த்திக்கிடம் சொன்னார்.
திரு சொன்ன கதை கௌதமுக்குப் பிடித்துப்போக, நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். திரு இயக்கும் அந்தப் படத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் அப்பா மகனாக நடிக்கின்றனர்.
இந்தப்படத்தில் கார்த்திக் நேர்மையான அரசு அதிகாரியாக நடிக்கிறாராம். வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா கெஸன்ட்ரா இப்படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.