டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.5500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டி, அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ஜெய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜெய், நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் அஜராகாததால் இரண்டு நாளில் ஜெய்யை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜெய் இன்று காலை சரண் அடைந்தார்.
தொடர்ந்து நீதிபதியிடம், தான் போதையில் கார் ஓட்டியதை ஒப்புக் கொண்டார் ஜெய். இதையடுத்து, ஜெய்யின் ஓட்டுனர் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதோடு ரூ.5,500 அபாராதமும் விதித்தார். நீதிபதியின் இந்த உத்தரவால் 6 மாத காலத்திற்கு ஜெய் காரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேப்போன்று ஜெய் போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.