'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவுக்கு வெளியே எத்தனையோ திறமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, சினிமா பிரபலங்களின் வாரிசுகளுக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது. இந்த வரிசையில், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யாவும் இணைந்துள்ளார்.
இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியான இவர், அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால், 'வேதாளம்' மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கருப்பன்'ஆகிய படங்களின் தயாரிப்பில் பங்கு பெற்றவர்.
தயாரிப்பாளராக இருந்த ஐஸ்வர்யா சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தெலுங்கில் உருவாகி வரும் 'ஆக்சிஜன்' என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாகி இருக்கிறார். இப்போது 'கூத்தன்' என்ற படத்திற்காகவும் இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.
'கூத்தன்' படத்தில் பாலாஜி இசையில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் ஒரு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளர். ஐஸ்வர்யாவுக்கு நல்ல குரல் வளம் இருப்பதை தெரிந்து கொண்டு அவரை ஒரு பாடலை பாட அழைத்திருக்கிறார்கள்.
அவர் அந்த பாடலை பாடிய விதம், குரலின் இனிமை ஆகியவை தயாரிப்பாளர் நில்க்ரிஸ் முருகனுக்கும், இசை அமைப்பாளருக்கும் மிகவும் பிடித்து போனதால் மற்றொரு பாடலையும் அவருக்கே கொடுத்துள்ளனர். ஏ.எல்.வெங்கி இயக்கத்தில் அறிமுக நடிகர் ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் இது.