சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 10-வது படமான 'நெஞ்சில் துணிவிருந்தால்' நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் டி.இமான் இசை அமைக்கும் ஐந்தாவது படம் இது. இப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனும், விக்ராந்தும் நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் விளம்பரங்களில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறார் விக்ராந்த்.
இது குறித்து விக்ராந்த் வெளிப்படையாக தன்னுடைய மன வருத்தத்தை சொல்லவில்லை. இந்நிலையில், நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இது பற்றி விளக்கம் அளித்தார் இயக்குநர் சுசீந்திரன்.
“இந்த படம் தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியில் உருவாகிறது. இதற்கு காரணம் யாருன்னா இந்தப்படத்துல கதாநாயகனாக நடிச்சிருக்குற சந்தீப் கிஷன் தான். அவருதான் இந்த படத்துக்கான தெலுங்கு தயாரிப்பாளர்களை கொண்டு வந்தாங்க. இந்த படத்துல இன்னொரு ஹீரோவா விக்ராந்த் நடிச்சிருக்கார்.
ஆனா, அவரோட ஒரு படத்தை கூட போஸ்டர்லயோ, விளம்பரங்கள்லயோ போட்டிருக்க மாட்டேன். விக்ராந்த், நீ அதை தவறா எடுத்துக்க வேண்டாம். நான் உருவாக்குன ஒரு ஹீரோதான் விஷ்ணு விஷால்! அவரைப்போல இப்போ நான் உன்னை (விஷ்ணு விஷால்) ஒரு ஹீரோவா உருவாக்கிகிட்டு இருக்கேன். கூடிய விரைவுல இந்த தமிழ்சினிமாவுல நீயும் ஒரு ஹீரோதான்'' என்றார்.