பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மெர்சலாயிட்டேன் என்ற படத்தை தயாரித்து வரும் ராஜேந்திரன் என்பவர், விஜய்யின் மெர்சல் பட தலைப்புக்கு தடை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால் தற்காலிகமாக மெர்சல் தலைப்பை பயன்படுத்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சுக்கு தடை விதித்த நீதிமன்றம் நேற்று அந்த தடையை நீக்கியதோடு, மெர்சல் என்ற தலைப்பிற்கு ராஜேந்திரன் தடை கோரியிருந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது. அதனால் மெர்சல் படத்திற்கான தடை நீங்கி விட்டது.
அதோடு, இந்த படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரராக நடிப்பதால், ஜல்லிக்கட்டு காளைகள் படத்தில் நடித்துள்ளன. அதனால் விலங்குகள் நல வாரியத்திடமும் முன்பே சான்றிதழ் பெற்று விட்டார்களாம். அதனால் தீபாவளிக்கு மெர்சல் திரைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை என்கிறார்கள். இதையடுத்து, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமியின் மனைவி ஹேமா ருக்குமணி, மெர்சல்- இது பெயர் அல்ல உணர்வு, தடைகளை தாண்டி வருகிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.