‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
கர்நாடக மாநிலத்தின் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பிரகாஷ்ராஜின் நெருங்கிய நண்பர். அப்போதே அதற்கு பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இருதினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரதமர் மவுனம் காப்பது வருத்தமளிக்கிறது, அவர் என்னை விட சிறந்த நடிகர் என்று விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், பிரதமரை விமர்சித்த பிரகாஷ் ராஜ் மீது லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற அக்., 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.