மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காமல் இருப்பது குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதோடு, பிரகாஷ்ராஜ் தான் பெற்ற தேசிய விருதுகளையும் திரும்பிக் கொடுக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது....
எனக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பிக் தரப் போவதாக வெளியாகும் செய்திகளைப் பார்த்து சிரிப்பு தான் வருகிறது. விருதுகளை திருப்பித்தரும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. என்னுடைய நடிப்பிற்காக வழங்கப்பட்ட விருதுகளைப் எண்ணி பெருமைப்படுகிறேன்.
நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாரவில்லை. எந்தவொரு கட்சித் தலைவரிடம் நான் பேசவில்லை. இந்தியாவின் குடிமகனான நான், என்னுடைய பிரதமரின் அமைதியைப் பற்றி பேச விரும்புகிறேன். உங்கள் அமைதி என்னை காயப்படுத்துகிறது என்று சொல்ல விரும்புகிறேன், இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. ஆனால், பிரகாஷ் ராஜ், விருதுகளை திரும்பக் தர போகிறான் என்று வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.