எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் சித்தார்த், சில ஆண்டுகளாக ஒரு பெரிய வெற்றிக்காக போராடி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஜில் ஜங் ஜக் படம் தோல்வியை தழுவியது.
தற்போது சித்தார்த், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியாக நடிக்கிறார்.
தமிழில் உருவாகும் படத்திற்கு "அவள்" என்றும், தெலுங்கில் உருவாகும் படத்தில் கிருகம் என்றும், ஹிந்தியில் உருவாகும் படத்திற்கு தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். வைகோம் 18 பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சித்தார்த்தும் இணைந்து தயாரிக்கிறார்.
இது ஒரு ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளது. படத்தில் சித்தார்த் நரம்பியல் நிபுணராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சத்தமின்றி நடந்து வந்த இதன் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. நவம்பர் மாதம் படம் திரைக்கு வர இருப்பதாக சித்தார்த் அறிவித்துள்ளார்.