பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் சித்தார்த், சில ஆண்டுகளாக ஒரு பெரிய வெற்றிக்காக போராடி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஜில் ஜங் ஜக் படம் தோல்வியை தழுவியது.
தற்போது சித்தார்த், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியாக நடிக்கிறார்.
தமிழில் உருவாகும் படத்திற்கு "அவள்" என்றும், தெலுங்கில் உருவாகும் படத்தில் கிருகம் என்றும், ஹிந்தியில் உருவாகும் படத்திற்கு தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். வைகோம் 18 பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சித்தார்த்தும் இணைந்து தயாரிக்கிறார்.
இது ஒரு ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளது. படத்தில் சித்தார்த் நரம்பியல் நிபுணராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சத்தமின்றி நடந்து வந்த இதன் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. நவம்பர் மாதம் படம் திரைக்கு வர இருப்பதாக சித்தார்த் அறிவித்துள்ளார்.