Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்பின் வெளிப்பாடாகத்தான் கட்டிப்பிடித்தேன் : சினேகன்

03 அக், 2017 - 17:44 IST
எழுத்தின் அளவு:
Snehan-reply-why-he-hugs-everyone

விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாடலாசிரியர் சினேகனும் ஒருவர். இவர் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து விட்டு வெளியே வந்திருக்கிறார். மேலும், இவர் பிக்பாஸ் வின்னராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தன்னைப்பற்றி வெளியாகி வந்த விமர்சனங்களை கண்டு அதிர்ந்து போன சினேகன், தற்போது அதுகுறித்து ஒரு விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாள் வாழ்க்கை வாழ்ந்து விட்டேன். அது ஒரு புதிய அனுபவம்.

மேலும், ஆரவ் என் குடும்பத்தில் ஒரு சகோதரன் அவன் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். என் ஆதரவாளர்கள் என் தேல்வியை எதிர்பார்க்காமல் அத்தனை வருத்தத்தையும், ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, அன்பு தேவைப்படுகிற இடத்தில் அரவணைத்தேன். ஆனால் நான் அன்பு செலுத்துவதை சினேகன் கட்டிப்பிடிப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள்ளே சென்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சுலபமாக ஒருவரை தொட்டு விட முடியாது. அன்பின் வெளிப்பாடாகத்தான் அவர்களை அரவணைத்தேன். அதை விமர்சனம் செய்துள்ளார்கள். எனக்கு இது பெரிதல்ல. விமர்சனங்களும் தோல்விகளும்தான் என்னை உயர்த்துகின்றன. இதை கண்டெல்லாம் நான் துவண்டு போக மாட்டேன். நம்மை இப்படி சொல்லிருக்கிறார்களே என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது அதற்காகத்தான் இதை பதிவிடுகிறேன்.

அதோடு, பிக்பாஸில் வெற்றி கிடைக்காதபோதும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தோல்வி என்னை சோர்வடைய செய்யவில்லை. நான் எப்போதுமே ஊர் குருவி மாதிரி மேலே மேலே பறந்து கொண்டே தான் இருப்பேன். இன்னும் போராடுவதற்கு காலமும், களமும் அழைக்கின்றன. ரொம்ப வலுவாக பதிவு பண்ண வேண்டும் என நினைக்கிறேன். நான் கிராமத்துக்காரன் என்னை எங்கு நட்டாலும் நான் முளைப்பேன். எனக்காக போராடிய, ஆதரவளித்த அத்தனை ரசிகர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்றேன்.
இவ்வாறு அந்த வீடியோவில் சினேகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in