அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வருவதால், இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பார்சிலோனா நாட்டுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள விஜய், முன்னதாகவே தனக்கான டப்பிங் வேலைகளை முடித்து விட்டார். அதோடு, படத்தின் முதல் பாதியை பின்னணி இசை இல்லாமலேயே பார்த்து விட்டு சென்றாராம்.
அவர் சென்றதை அடுத்து, மெர்சல் முதல் பாதிக்கு பின்னணி இசையமைக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான் ஒரு வாரமாக இரவு பகல் என்று இடைவிடாமல் பின்னணி இசையமைக்கத் தொடங்கினாராம். அதையடுத்து தற்போது அவர் இரண்டாவது பாதி படத்திற்கான பின்னணி இசையில் பிசியாக இருக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் விஜய்யின் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு விதமான மியூசிக் ட்ராக் உருவாக்கியுள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான். அந்த ஒவ்வொரு ட்ராக்கிலும் சில புதுமையான இசைக்கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறாராம்.