எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் விரைவில் பிரவேசிக்க உள்ளனர். முன்னணி நடிகர்கள் இருவரும் அரசியலில் பிரவேசிக்க இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களில் யார் முதலில் களம் இறங்க உள்ளனர் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம், அனைவரும் அதற்கு தயாராகுங்கள் என தனது ரசிகர்கள் உடனான சந்திப்பின் போது ரஜினி அறிவித்தார். அப்போது முதலே ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சொல்லப்போனால் ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு பிறகு தான் நடிகர் கமலும், தனது அரசியல் குறித்த பார்வைகளை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தார்.
இதனிடையே தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில், ரஜினியின் மனைவி லதா பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, அரசியல் குறித்து ரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதை நாங்கள் வரவேற்போம். அவரின் அரசியல் பிரவேசம் பற்றி அவர் தான் சொல்ல வேண்டும். அரசியல் குறித்து ரஜினி விரைவில் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லது செய்வார். நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார், பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.