மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழித்திரு படத்தின் ஆடியோ விழாவில், அப்பட நாயகியான சாய் தன்ஷிகா மேடையில் பேசும்போது, தனது பெயரை விட்டு விட்டதால் அவரை அடுக்கு மொழியில் கடுமையாக விமர்சித்தார் டி.ராஜேந்தர். அதையடுத்து தான் செய்த தவறுக்கு அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் சாய்தன்ஷிகா. ஆனபோதும் டி.ஆர் தொடர்ந்து அவரை காயப்படுத்தினார். இதையடுத்து நடிகர் சங்க செயலாளரான விஷால், அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் துல்கர்சல்மான் நடித்த சோலோ படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில் காமெடி யனாக நடித்துள்ள சதீசும் வந்திருந்தார். அவர் மேடையில் பேச வரும் போது, ஒவ்வொருவரின் பெயரையும் சொன்னவர், யாருடைய பெயரையாத விட்டு விட்டால் அதுவே பெரிய பிரச்சினையாகி விடும் என்று பயத்தை காட்டியபடி பேசினார்.
அதோடு, இந்த படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அப்போது அவரது பெயரை குறிப்பிட்டபோது, அவர் வந்திருப்பார். ஆனால் அவரைத்தான் வரவிடாம செய்திட்டாங்களே என்றும் சொல்லிக்கொண்டார் சதீஷ்.