'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் |
உனக்கென இருப்பேன் என்ற பெயரில் உருவாகி வந்த புதிய படத்தின் பெயர் உன்னதமானவன் என்று மாற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, "உனக்கென இருப்பேன்" என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வந்தது. பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைரக்டர் என்.சுந்தரேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பெயர் உன்னதமானவன் என மாற்றப்பட்டுள்ளது.
புதிய படம் குறித்து டைரக்டர் சுந்தரேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில், `மதுரையை பின்னணியாக கொண்ட கதை இது. ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் மீது கதாநாயகி காதல் கொள்கிறாள். அவன் மனதில் அவள் இடம் பிடித்தாளா, அவன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான்? என்பது திரைக்கதை. இந்த படத்துக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ஏ.கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், என்று கூறியுள்ளார்.