போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு |
பிரபல காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர் அல்வா வாசு என்கிற வாசுதேவன், உடல்நலக்குறைவால் காலமானார்.
மதுரை மாவட்டம் ஹார்விபட்டியை சேர்ந்தவர் வாசுதேவன். பி.ஏ., பட்டம் பெற்ற இவர், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார். மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய வாசுதேவன், வாழ்க்கை சக்கரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும் சத்யராஜின் அமைதிப்படை படம் தான் அவரை பிரபலமாக்கியது. அந்தப்படத்தில் அவர், சத்யராஜூக்கு அல்வா செட் பண்ணி கொடுப்பார். அதனாலேயே அவருடன் அல்வா என்ற அடைமொழியும் ஒட்டிக்கொள்ள அல்வா வாசுவானார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். அதிலும் வடிவேலுவுடன் இவர் நடித்த "இங்கிலீஷ்காரன், கருப்புசாமி குத்தைக்காரன், எல்லாம் அவன் செயல்" உட்பட... பல படங்கள் காமெடியில் அவரை பிரபலமாக்கியது.
நூற்றுகணக்கான படங்களில் நடித்து, மக்களை சிரிக்க வைத்த கலைஞர், கல்லீரல் முழுமையாக செயலிழந்து மிகவும் கவலைக்கிடமான முறையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ருக்மணிபாளையத்தில் அவரது வீட்டில் காலமானார். வாசுவிற்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.
வாசுவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று(ஆகஸ்ட் 18) மாலை 3 மணியளவில் இறுதிச்சடங்கு மதுரை, தத்நேரி மயானத்தில் நடக்கிறது.