ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார். தமிழில் உருவான முதல் கேவா கலர் வண்ணப் படம். இதனால் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் பொருட் செலவில் படம் தயாரானது. படம் தயாரிப்பில் இருந்தபோது பானுமதியுடன் ஒரு பாடல் காட்சியும், ஒரு சண்டைக் காட்சியும் பாக்கி இருந்த நிலையில் எம்.ஜி.ஆரின் கால்ஷீட் முடிந்து விட்டது. அவர் வேறு படத்திற்கு சென்று விட்டார்.
அந்த பாடல் காட்சியும், சண்டையும் இல்லாமல் படத்தை வெளியிடலாம். ஆனால் டி.ஆர்.சுந்தரம் எடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். எம்.ஜி.ஆருக்காக காத்திருக்க விரும்பாத டி.ஆர்.சுந்தரம் எம்.ஜி.ஆர் போன்ற ஒருவரை டூப்பாக போட்டு அந்த பாடலையும், சண்டை காட்சியையும் எடுத்து முடித்தார்.
சில நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர் மார்டன் தியேட்டர்சுக்கு வந்தார். பாடலையும் சண்டையையும் எடுத்து விடலாமா என்று டி.ஆர்.சுந்ரத்திடம் கேட்டிருக்கிறார். "அதெல்லாம் எடுத்து முடித்தாச்சு ராமச்சசந்திரன். அது ரெடியா இருக்கு வேணா பார்த்துட்டு போங்க" என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் டி.ஆர் சுந்தரம் அது எந்த பாடல் காட்சி, எந்த சண்டைக் காட்சி என்பதை கடைசி வரை வெளியிடவில்லை. இனி டி.வியில் அந்த படத்தை பார்க்க நேர்ந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்வுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., மார்டன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கவில்லை.