ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, தெலுங்கில் அடுத்து தயாரிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் தெலுங்கில் தயாரிப்பாளராகவும், சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் இப்போது மணிரத்னம் இயக்க இருக்கும் பூக்கடை படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கில் குண்டலூர் கோடாரி என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஆதி பினிஷெட்டி, டாப்சி, சந்தீப் கிஷன் ஆகியோருடன் லட்சுமி மஞ்சுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். புதுமுகம் குமார் நாகேந்திரா இயக்குகிறார்.
1986-ல் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு அழகிய காதலை இப்படத்தில் சேர்ந்துள்ளார் புதுமுக டைரக்டர். விரைவில் துவங்க இருக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறுகையில், இளையராஜா அவர்கள் என்னுடைய படத்திற்கு இசையமைப்பதை எண்ணும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்கான இசை கம்போசிங் சென்னையில் நடக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார்.