சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, தெலுங்கில் அடுத்து தயாரிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் தெலுங்கில் தயாரிப்பாளராகவும், சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் இப்போது மணிரத்னம் இயக்க இருக்கும் பூக்கடை படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கில் குண்டலூர் கோடாரி என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஆதி பினிஷெட்டி, டாப்சி, சந்தீப் கிஷன் ஆகியோருடன் லட்சுமி மஞ்சுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். புதுமுகம் குமார் நாகேந்திரா இயக்குகிறார்.
1986-ல் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு அழகிய காதலை இப்படத்தில் சேர்ந்துள்ளார் புதுமுக டைரக்டர். விரைவில் துவங்க இருக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறுகையில், இளையராஜா அவர்கள் என்னுடைய படத்திற்கு இசையமைப்பதை எண்ணும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்கான இசை கம்போசிங் சென்னையில் நடக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார்.