ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
கங்காரு, வந்தாமல, கதிரவனின் கோடைமழை ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது பிச்சுவாகத்தி, மிக மிக அவசரம், ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில், தான் எந்த பட விழாக்களில் கலந்து கொண்டாலும் அங்கு வந்திருக்கும் டைரக்டர்களிடம் தமிழ் நடிகையான எனக்கு சான்ஸ் கொடுங்கள் என்று உரிமையோடு கேட்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார் ஸ்ரீபிரியங்கா.
அதேபோல், சமீபத்தில் அவர் நாயகியாக நடித்துள்ள பிச்சுவாகத்தி படத்தின் ஆடியோ விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த டைரக்டர்கள், சாட்டை அன்பழகன், சுந்தரபாண்டியன் டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் தான் பேசும்போது சான்ஸ் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாராம் ஸ்ரீபிரியங்கா. ஆனால் முன்னதாக பேசிய அந்த இயக்குனர் கள், ஸ்ரீபிரியங்காவின் நடிப்பு குறித்து பாராட்டி பேசியதோடு, இவரை மாதிரி தமிழ் பேசும் தமிழ்நாட்டு நடிகைகளை ஆதரிக்க வேண்டும். அதைப்பார்த்து திறமையான தமிழ் நடிகைகள் சினிமாவை நோக்கி வர வேண்டும் என்று பேசினார்கள்.
இந்த பேச்சைக்கேட்டு நெகிழ்ந்து போனார் ஸ்ரீபிரியங்கா. அதனால் பின்னர் தான் பேச வரும்போது, இந்த இயக்குனர்களெல்லாம் என்னைப்பற்றி தெரிந்திருக்க மாட்டார்களோ என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் என்னைப் பற்றியும், என் நடிப்பு பற்றியும் அவர்கள் பெருமையாக பேசுவதைக் கேட்கும்போது எனக்கு எதுவுமே பேசத்தோன்றவில்லை. அவர்கள் மனதில் நான் இருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோசமாக உள்ளது என்று ஓரிரு வார்த்தைகளிலேயே தனது பேச்சை முடித்துக்கொண்டார் ஸ்ரீபிரியங்கா.