Advertisement

சிறப்புச்செய்திகள்

ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமா சரியான ரூட்டில் செல்கிறது! -களவாணி திருமுருகன்

09 பிப், 2017 - 10:01 IST
எழுத்தின் அளவு:
tamil-cinema-is-in-the-correct-track-says-actor-thirumurugan-of-kalavani-movie

சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த களவாணி படத்தில் வில்லனாக அறிமுகமானவர் திருமுருகன். முதல் படத்திலேயே யதார்த்தமான வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், பின்னர் பென்சில், 49 ஓ உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது கட்டப்பாவை காணோம், அடங்காதே, ஓணான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்த படங்கள் பற்றி திருமுருகன் கூறுகையில், களவாணி படம் எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதையடுத்து நான் வித்தியாசமான வில்லன் வேடங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்போது தமிழ் சினிமாவில் காமெடி படங்களாக வரத்தொடங்கின. பின்னர் ஹாரர் படங்களாக வந்தன. அதனால் என்னைப்போன்ற வில்லன் நடிகர்களுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால்தான் என்னை அதிகமான படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் பேய் பட சீசன் ஓய்ந்து மீண்டும் எல்லா அம்சங்ளும் கொண்ட படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தமிழ்சினிமா மீண்டும் சரியான ரூட்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. அதனால் இனிமேல் என்னை அதிகமான படங்களில் பார்க்கலாம்.


மேலும், கட்டப்பாவை காணோம், அடங்காதே படங்களில் அதிரடி வில்லனாகவும், ஓணான் படத்தில் நெகடீவ் ஹீரோவாகவும் நடிக்கிறேன். இந்த படங்க ளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரமும், அடையாளமும் கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அதோடு, நம் முடைய ரசிகர்களைப் பொறுத்தவரை ஆதிபராசக்தியையும் ரசிப்பார்கள், உதிரிப் பூக்களையும் ரசிப்பார்கள், சகலகலா வல்லவனையும் ரசிப்பார்கள். அவர் களைப்பொறுத்தவரை நல்ல எண்டர்டெய்ன்மென்ட் படங்களாக இருக்க வேண்டும். அந்தவகையில், தற்போது அனைத்து அம்சங்களும் கொண்ட கதைகளில் படங்கள் வரத் தொடங்கியிருக்கிறது. இது வரவேற்க வேண்டிய விசயம் என்கிறார் திருமுருகன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in