புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பாசமலர் உள்பட பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் ஜீவிதா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்யும் சாமி வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த அனுபவம் குறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களில் நடிக்கத் தொடங்கி எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். என்றாலும் சாமியின் அருள் பெற்ற கதாபாத்திரம் இப்போதுதான் கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரத்திற்காக எனது கெட்டப்பை மாற்றி நடிக்கிறேன். சாமி எனக்குள் வந்து நல்ல மனிதர்களுக்கு உதவி செய்யும் வேடம். இந்த வேடம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
மேலும், இதற்கு முன்பு குடும்பப் பாங்கான கேரக்டர்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக நடித்த எனக்கு இந்த நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது புதுமையாக உள்ளது. அதனால் இந்த வேடத்தை உணர்ந்து இயல்பாக நடித்து வருகிறேன் என்று கூறும் ஜீவிதா, பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்து வரும் ஆருத்ரா என்ற படத்திலும் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.