பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாசமலர் உள்பட பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் ஜீவிதா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்யும் சாமி வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த அனுபவம் குறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களில் நடிக்கத் தொடங்கி எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். என்றாலும் சாமியின் அருள் பெற்ற கதாபாத்திரம் இப்போதுதான் கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரத்திற்காக எனது கெட்டப்பை மாற்றி நடிக்கிறேன். சாமி எனக்குள் வந்து நல்ல மனிதர்களுக்கு உதவி செய்யும் வேடம். இந்த வேடம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
மேலும், இதற்கு முன்பு குடும்பப் பாங்கான கேரக்டர்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக நடித்த எனக்கு இந்த நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது புதுமையாக உள்ளது. அதனால் இந்த வேடத்தை உணர்ந்து இயல்பாக நடித்து வருகிறேன் என்று கூறும் ஜீவிதா, பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்து வரும் ஆருத்ரா என்ற படத்திலும் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.