ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா.. திலேப்-காவ்யா மாதவன் இருவரும் தங்களது வாழ்க்கை துணைகளை விவாகரத்து செய்ததாகட்டும், மீண்டும் தாங்கள் இருவரும் மறுமணம் செய்ததாகட்டும் இரண்டுமே அவர்களது சொந்த வாழக்கை சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் சோஷியல் மீடியாவில் உள்ள சிலர், இந்த இருவரின் அதிரடி மறுமணத்தில் உடன்பாடு இல்லாமல் வெறுப்பாக கருத்துக்களை கூறியதே தவறு.. இந்த நிலையில் குடும்பத்தை பிரித்த நாசகாரி' என்கிற ரேஞ்சில் காவ்யா மாதவனை விமர்சிக்கும் அளவுக்கு வார்த்தைகளில் எல்லைமீறுவது திலீப்-காவ்யா மாதவன் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது..
இதனால் இவர்கள் சோஷியல் மீடியாவில் உள்ள சிலர் மீதும், தங்கள் மீது புழுதி வரை தூற்றிவரும் சில இணையதளங்கள் மீதும் சைபர் க்ரைமில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.. அதன் ஒரு பகுதியாக காவ்யா மாதவனின் சகோதரர் மிதுன் மாதவன் சைபர் செல்லில் புகார் கொடுத்துள்ளார். தன்னை மட்டுமல்லாமல் தனது மகள் மீனாட்சியையும் தரக்குறைவான வார்த்தைகளில் சிலர் விமர்சிப்பது கண்டு, திலீப்பும் இதே முடிவுக்கு வந்துள்ளாராம்.
இன்னொரு பக்கம் இந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்கு உறுதுணையாக இருந்தார் என திலீப்பின் நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷா மீதும், திலீப்-மஞ்சு வாரியருக்குள் தேவையில்லாமல் பிரிவை உண்டாக்கினார் என நடிகை பாவனா மீதும் பலர் அவதூறு பரப்பி வருவதால், அவர்கள் இருவரும் கூட சைபர் செல்லில் புகார் கொடுக்க இருக்கிறார்களாம்.