ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
புலி முருகன்' படத்தில் தான் ஏற்று நடித்த முருகன் கேரக்டருக்கு அப்படியே முற்றிலும் மாறான ஒரு குடும்ப சம்சாரியாக தற்போது முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. படத்தில் இவருக்கு ஜோடியாக, மனைவியாக மீண்டும் இணைந்து நடிக்கிறார் மீனா.. 'வெள்ளிமூங்கா' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஜிபு ஜேக்கப் இயக்கம் இரண்டாவது படமே மோகன்லால் நம்ம ஊர் 'கபாலி' ரஞ்சித் அளவுக்கு இவர் மேலும் இந்தப்படத்தின் மேலும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தப்படம் கணவன் மனைவிக்குள் இழையோடும் காதல் பற்றிய கருத்தையும் சொல்கிறதாம். அதனால் இந்தப்படத்திற்காக ஒரு போட்டியை மோகன்லால் தனது வாயாலேயே அறிவித்துள்ளார்.. அதாவது ஆதர்ச கணவன்மார்கள் தங்களது மனைவி தான் தனது வாழ்க்கை என்பதை அவர்களிடம் ரொமான்டிக்காக வெளிப்படுத்தும் விதமாக 'மை லைப் மை ஒய்ப்' என்கிற வாசகத்தை சொல்லி, அதை 30 வினாடிகள் ஓடும் வீடியோவாக படமாக்கி அனுப்பும்படி கூறியுள்ளார்.. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து தம்பதிகள், இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லாலுடன் கலந்துகொள்வதுடன் அவர் கையால் சிறப்பு பரிசு பெரும் பாக்கியசாலிகளும் ஆகிறார்கள்.