ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புலி முருகன்' படத்தில் தான் ஏற்று நடித்த முருகன் கேரக்டருக்கு அப்படியே முற்றிலும் மாறான ஒரு குடும்ப சம்சாரியாக தற்போது முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. படத்தில் இவருக்கு ஜோடியாக, மனைவியாக மீண்டும் இணைந்து நடிக்கிறார் மீனா.. 'வெள்ளிமூங்கா' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஜிபு ஜேக்கப் இயக்கம் இரண்டாவது படமே மோகன்லால் நம்ம ஊர் 'கபாலி' ரஞ்சித் அளவுக்கு இவர் மேலும் இந்தப்படத்தின் மேலும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தப்படம் கணவன் மனைவிக்குள் இழையோடும் காதல் பற்றிய கருத்தையும் சொல்கிறதாம். அதனால் இந்தப்படத்திற்காக ஒரு போட்டியை மோகன்லால் தனது வாயாலேயே அறிவித்துள்ளார்.. அதாவது ஆதர்ச கணவன்மார்கள் தங்களது மனைவி தான் தனது வாழ்க்கை என்பதை அவர்களிடம் ரொமான்டிக்காக வெளிப்படுத்தும் விதமாக 'மை லைப் மை ஒய்ப்' என்கிற வாசகத்தை சொல்லி, அதை 30 வினாடிகள் ஓடும் வீடியோவாக படமாக்கி அனுப்பும்படி கூறியுள்ளார்.. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து தம்பதிகள், இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லாலுடன் கலந்துகொள்வதுடன் அவர் கையால் சிறப்பு பரிசு பெரும் பாக்கியசாலிகளும் ஆகிறார்கள்.