சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
திலீப்-காவ்யா மாதவன் திருமணம் ஒரு தரப்புக்கு சந்தோஷத்தையும் மற்றொரு தரப்பினருக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி இருப்பது மறுக்க முடியாத உண்மை.. ஆனால் இதில் இந்த இருவர் அல்லாத இன்னொரு தரப்பினருக்கு இந்த திருமணம் திடீர் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திலீப்பை வைத்து தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்கள் தரப்புதான் அது.. காரணம் திலீப் திருமணத்தால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரிடம் எழுந்துள்ள எதிர்மறையான கருத்துக்கள் அடுத்தடுத்து வெளியாகும் திலீப்பின் படங்களை, அவற்றின் வசூலை பாதிக்குமோ என்கிற அச்சம் இயல்பாகவே அவர்களுக்கு எழுந்துள்ளது..
குறிப்பாக திலீப் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' என்கிற படத்தின் தயாரிப்பாளர் தான், தற்போது கைகளை பிசைந்தபடி குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறாராம்.. ஆனால் விநியோகஸ்தர்களோ திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தால் அவரது படங்களுக்கு எந்த பாதிப்பும் வராது, அதனால் இது குறித்து அலட்டிக்கொள்ளவே தேவையில்லை என்கிறார்கள். அதற்கு உதாரணமாக முந்தைய சம்பவம் ஒன்றையும் குறிப்பிடுகிறார்கள்..
அதாவது திலீப், மஞ்சு வாரியருடன் திருமண விவாகரத்து செய்வதாக அறிவித்தபோது, இதேபோல அவருக்கு எதிரான அலை எழுந்தது உண்மை.. அதனை தொடர்ந்து அந்த சமயத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த 'ரிங் மாஸ்டர்' படம் வசூலில் நல்ல அடி வாங்கும் என்றே கணக்கிட்டார்கள்.. ஆனால் படமோ சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி லாபத்தை அள்ளியது. பொதுவாகவே ரசிகர்கள், தங்களது அபிமான நடிகர்களின் சொந்த வாழ்க்கையை திரைப்படங்களுடன் குழப்பிக்கொள்வதில்லை என்று தைரியம் சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்..