மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இன்னும் பத்து நாட்களுக்காவது திலீப்-காவ்யா மாதவன், மஞ்சு வாரியர் இந்த மூன்று பேரும் சோஷியல் மீடியாக்களை கட்டாயம் எந்தவகையிலாவது ஆக்க்கிரமித்திருக்கவே செய்வார்கள்.. காரணம் எதிர்பாராத விதமாக நடைபெற்ற திலீப் காவ்யா-மாதவன் அதிரடி திருமணம் தான். மஞ்சு வாரியருக்கு துரோகம் பண்ணிவிட்டார் என திலீப்பை ஒரு சிலர் வருத்தெடுத்துக்கொண்டு இருக்க, இன்னும் சிலரோ திலீப்புக்கு ஆதரவாக மஞ்சு வாரியரின் பக்கமும் தாக்குதல் கணைகளை திருப்பியுள்ளார்கள். குறிப்பாக திலீப்பின் சினிமா நண்பர்கள் தான் இந்த தாக்குதலில் இறங்கியுள்ளனர்.
அவர் பக்கம் நியாயம் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்காக ஒரு சின்ன உதாரணத்தையும் குறிப்பிடுகிறார்கள்.. நேற்று முன்தினம் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக மஞ்சு வாரியர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு, திலீப்பை விட்டு தான் பிரிந்து வந்தது சரியான முடிவு என மறைமுகமாக சொல்லும் பதிலாகவே இருந்தது.. அந்த பதிவை அவர் மும்பையில் இருந்துகொண்டு பதிவேற்றியதாக பேஸ்புக் காட்டுகிறது. ஆனால் அந்த சமயத்திலோ மஞ்சுவாரியர் கேரளாவில் நடைபெற்று வரும் 'c/o சாயிராபானு' என்கிற படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருந்தார் என்றும், இங்கே இருந்தவர் மும்பையில் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.