பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சமீபத்தில் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்துகொண்ட திலீப் பலரின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். குறிப்பாக, அவர் வேறு யாரோ ஒரு பிரபலமில்லாத, அல்லது வேறு துறையை சார்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்தால்கூட, இந்த அளவுக்கு விமர்சனங்கள் எழுந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால் ஏற்கனவே அவர் முதல் திருமணம் செய்து விவாகரத்து செய்ததும் ஒரு நடிகையைத்தான். இப்போது மறுமணம் செய்திருப்பதும் கூட இன்னொரு விவாகரத்தான் நடிகையைத்தான்.. அதிலும் குறிப்பாக இவர்களது முதல் திருமண விவாகரத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்ட நடிகையுடன் தான் என்பதாலேயே இது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது...
சினிமாவில் உள்ள பலர் இதுபோன்று இன்னொரு நடிகையை திருமணம் செய்திருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நடிகையுடன் அந்த நடிகருக்கு ஏற்பட்ட பந்தம், முதல் மனைவியுடனான பிரிவிற்குப்பின் ஏற்பட்டதாக இருக்கும்.. அப்போது சம்பந்தப்பட்ட நடிகர் மேல் 'பாவம்.. போனால் போகிறது' என்கிற விதமாக பரிதாப உணர்வு இயல்பாகவே ஏற்பட்டு விடும்.. ஆனால் திலீப்போ மஞ்சு வாரியரை பிரிந்த நாளில் இருந்து இத்தனை நாட்களாக தனக்கும் காவ்யா மாதவனுக்கும் சினிமாவில் நடிக்கும் நட்பைத்தவிர எந்த தொடர்புமில்லை என்றே சொல்லிவந்தார்..
அதுதான் இப்போது அவர் காவ்யா மாதவனை திடீரென திருமணம் செய்ததும் அவரை விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது. இப்படி விமர்சனம் கிளம்பும் என திலீப்புக்கும் தெரியாமல் இருக்குமா என்ன..? ஆனால் அவர் இதுபற்றி கேட்ட தனது நண்பர்களிடம், இன்று என்னை விமர்சிப்பவர்கள் நான் ஏதோ தவறிழைத்துவிட்டவன் போல நினைத்துக்கொண்டே பேசுகிறார்கள்.. எங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.. ஆனால் அப்படி பேசுபவர்களுக்கு தங்கள் வாழ்க்கையிலும் ஒரு நாள் இந்த நிஜம் உறைக்கும்போதுதான் என் பக்கத்து நியாயம் புரியவரும்.. அதனால் என்னை விமர்சிப்பவர்களை பற்றி கவலை இல்லை என கூறியுள்ளாராம்”.