ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு டாப் இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர்கள் ஒரு சிலர்தான். ஒவ்வொருவருக்கும் தனித் தனியான தனித் தன்மை உண்டு என்றாலும் அவர்கள் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அவர்களில் மணிரத்னம், ஷங்கர், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன், வெற்றி மாறன் என இன்னும் சிலரையும் உதாணரமாகச் சொல்லலாம்.
மணிரத்னத்தின் உதவியாளராக இருந்தவர்களில் தற்போதைக்கு ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் 'இறுதிச் சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா. வெற்றி மாறன் உதவியாளர் ரவி அரசு 'ஈட்டி' வெற்றிப் படத்தை இயக்கினார். மற்ற இயக்குனர்களின் உதவியாளர்களை விட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய சிலர் தற்போதைக்கு முத்திரை பதித்து வருகிறார்கள். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கூட சில நாட்களாக சில மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருந்தன.
அதர்வா நடித்து கடந்த வாரம் வெளியான 'கணிதன்' படத்தை இயக்கி டி.என்.சந்தோஷ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர். 'அரிமா நம்பி' படத்தை இயக்கி தற்போது விக்ரம், நயன்தாரா நடிக்கும் 'இரு முகன்' படத்தை இயக்கி வரும் ஆனந்த் சங்கர், 'மான் கராத்தே' சமீபத்தில் வெளிவந்த 'கெத்து' படத்தை இயக்கிய திருக்குமரன், கடந்த ஆண்டு வெளிவந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற 'டிமான்ட்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, 'எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன்' ஆகிய படங்களை இயக்கிவரும் தற்போது கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கும் 'சக்கர வியூகா' படத்தை இயக்கி வரும் சரவணன் ஆகிய அனைவருமே ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்கள். இவர்கள் அனைவருமே வித்தியாசமான கதைகளாலும், அதைப் படமாக்கிய விதத்தாலும் இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.