‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
டோலிவுட்டில் பிரமாண்டமாக திரைக்கு வந்து வசூலிலும் பிரமாண்ட சாதனை நிகழ்த்தியிருக்கும் பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி தற்போது அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ரூ.20 கோடி சம்பளமாக தருவதாகக் கூறிய போதும் இயக்குநர் ராஜமௌலி சிரஞ்சீவி பட வாய்ப்பை மறுத்து விட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் தான் நடிகரும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரண் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தை சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பூரி ஜெகன்நாத் சிரஞ்சீவிக்காக ஆட்டோ ஜானி என்ற பட தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது. இதன் காரணமாகவே ராஜமௌலி சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்ததாகக் கூறப்படுகின்றது.