தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ராம் தற்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து அவர் மிஷ்கினின் தம்பியும், உதவியாளருமான ஆதித்யா இயக்கும் சவரக்கத்தி படத்தில் நடிக்கிறார். இதில் ராம்தான் ஹீரோ, மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார்.
ராம் சலூன்கடை நடத்தும் நாவிதராக நடிக்கிறார். பிச்சை என்பது அவரது கேரக்டர் பெயர். அவரது வாடிக்கையாளராக மிஷ்கின் நடிக்கிறார். இவருக்கும் நடக்கும் உரையாடல் மூலமாக கதை சொல்லப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கும் கதை. தனது சலூன்கடை அனுபங்களின் அடிப்படையில் மிஷ்கின் இந்த கதையை எழுதியுள்ளார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். மனிதநேயம்தான் படத்தில் சொல்லப்படும் மெசேஜ். பூர்ணா 3 குழந்தைகளின் தாயாக நடிக்கிறார். ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.