மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இயக்குனர் ராம் தற்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து அவர் மிஷ்கினின் தம்பியும், உதவியாளருமான ஆதித்யா இயக்கும் சவரக்கத்தி படத்தில் நடிக்கிறார். இதில் ராம்தான் ஹீரோ, மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார்.
ராம் சலூன்கடை நடத்தும் நாவிதராக நடிக்கிறார். பிச்சை என்பது அவரது கேரக்டர் பெயர். அவரது வாடிக்கையாளராக மிஷ்கின் நடிக்கிறார். இவருக்கும் நடக்கும் உரையாடல் மூலமாக கதை சொல்லப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கும் கதை. தனது சலூன்கடை அனுபங்களின் அடிப்படையில் மிஷ்கின் இந்த கதையை எழுதியுள்ளார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். மனிதநேயம்தான் படத்தில் சொல்லப்படும் மெசேஜ். பூர்ணா 3 குழந்தைகளின் தாயாக நடிக்கிறார். ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.