ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னணி திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள், பாடகர், பாடகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
எம்.எஸ்.வியின் உருவப்படத்தை திறந்து வைத்து இளையராஜா உரையாற்றுகிறார். தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொதுச் செயலாளர் டொமினிக் சேவியர், பொருளாளர் வி.சேகர், அறக்கட்டளை தலைவர் பி.ஜி.வெங்கடேஷ், செயலாளர் சங்கரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். "மெல்லிசை மன்னருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தவும், அவரை கவுரவிக்கவும் திரையிசைக் கலைஞர்கள் தவறாது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.