'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் அதிக படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட சொல்லிவிடும் அர்ஜுன் என்று. அவர் சமீபத்தில் நடித்த வனயுத்தம், ஜெய்ஹிந்த் 2 ஆகியவற்றிலும் போலீஸ் அதிகாரிதான் நடித்தார். அஜித்துடன் நடித்த மங்காத்தாவிலும் போலீஸ் அதிகாரிதான். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு மெல்லிய கோடு படத்திலும் போலீஸ் அதிகாரிதான்.
இந்த நிலையில் தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, மலையாளத்தில் பெருச்சாழி படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. கப்பல் படத்தை தயாரித்த ஐ ஸ்டூடியோ சார்பில் கதன், உமா சங்கர் தயாரிக்கிறார்கள்.
"பெருச்சாழி படத்தில் நல்ல அரசியல்வாதிகள், போலி அரசியல்வாதிகளை பற்றிச் சொன்னேன். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் காட்ட இருக்கிறேன். காவல்துறையின் உள்ளே நடக்கும் அரசியலை சொல்ல இருக்கிறேன். நடுத்தர வயது போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு அர்ஜுன் பொருத்தமானவர் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். 50 சதவிகித படப்பிடிப்பு சென்னையிலும் 50 சதவிகித படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது" என்கிறார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்