டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் சாய் தரன் தேஜ் நடித்துள்ள "சுப்ரமணியம் பார் சேல்" திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் நடிகர் சாய் தரன் இயக்குநர் சுனில் ரெட்டி இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்ஷன் திரைக்கதை கொண்ட இப்படத்திற்கு திக்கா என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். தயாரிப்பாளர் ரோஹின் ரெட்டி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் இலங்கையில் நடத்த சுனில் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என கூறப்படுகின்றது. இயக்குநர் சுனில் ரெட்டி இயக்கிய ஓம் 3டி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் திக்கா படத்திலும் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் சாய் தரன் தேஜிற்கு ஜோடியகாக நடிக்க நாயகியை படக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.