ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களிடம் ஒரு பெயர் பெற ஒவ்வொருவரும் எவ்வளவோ முயற்சி செய்வார்கள். சில பல போராட்டங்களுக்குப் பின் அவர்களுக்கென தனிப் பெயரும் கிடைத்து விடும். ஆனால், அந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அதன் பின் தலைவலியே ஆரம்பமாகும். தேசிய விருது பெற்ற பின் தனுஷுக்கென ஒரு தனி அந்தஸ்து தமிழ்த் திரையுலகத்தில் கிடைத்தது. யதார்த்தமான நடிகர் என பெயரும் எடுத்தார். ஆனால், அப்படிப்பட்ட பெயரை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுச் செய்தி வெளிவந்த பின்னும் தன்னுடைய பிறந்த நாளை 'பார்ட்டி' வைத்து கொண்டாடியதில் இழந்துவிட்டார். அதனால், நேற்றும், இன்றும் தனுஷுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவலாக எதிர்ப்புக் கருத்துகள் பதிவாகி வருகிறது.
அது பற்றி தனுஷ் எந்த விதமான அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் இருந்து தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பரவை முனியம்மாவுக்கு 5 லட்ச ரூபாய் தருவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனுஷின் இந்த உதவி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். 5 லட் ச ரூபாய் உதவி என்பது சிறிய தொகையல்ல, மீண்டும் பரவை முனியம்மா பழையபடி வந்து சினிமாவில் பாட வைக்கும் அளவிற்கு உதவி செய்வதாகவே இருக்கும்.
அதே சமயம் திடீரென தனுஷ் இந்த உதவி செய்ய முன்வந்துள்ளது திரையுலகிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பார்ட்டி' கொண்டாடிய விஷயத்தில் அவருக்கு எதிராக செய்திகள் வந்ததை மறைப்பதற்கே தனுஷ் இந்த பண உதவி செய்தியை வெளியிட்டுள்ளார் என்றும் திரையுலகிலும் பேசிக் கொள்கிறார்கள்.
அரசியல்வாதிகள்தான் ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் செய்வது வழக்கம், தனுஷின் இந்த உதவிப் பின்னணியிலும் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.