ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பிரேமம்' படம் மூலம் மலையாள இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் சாய் பல்லவி.. நம் தமிழ்நாட்டை சேர்ந்தவரான இவர் விஜய் டிவியில் பங்குபெற்ற 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கண்களில் பட்டிருக்கிறார். அப்புறம் என்ன..? 'பிரேமம்' படம் மூலம் சினிமா வாய்ப்பு கதவை தட்ட, இப்போது ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு போய்விட்டார். ஆனாலும் தான் நடித்த 'பிரேமம்' படம் ஆன்லைனில் லீக்காகி, அதன் மூலம் பல பிரச்சனைகளை சந்தித்து வருவது கண்டு ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்.
“சினிமாவுக்கு வருவதற்குமுன், இப்படி திருட்டு விசிடி என்கிற பிரச்சனையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அதற்காக பெரிதாக் அலட்டிக்கொண்டதில்லை. ஆனால் ஒரு நடிகையான பின்னர்தான் ஒரு படத்திற்காக தயாரிப்பாளர் பணத்தை தண்ணீராக கொட்டுவதையும், இயக்குனர் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது கடின உழைப்பை கொட்டுவதையும் கண்கூடாக பார்த்தேன். இந்த உழைப்பை அனுமதியின்றி திருடுகிறார்களே என் நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என தந்து வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் சாய் பல்லவி.