டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கியுள்ள படம் ''விசாரணை''. அவரின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, தனுஷின் வொண்டர் ஃபார் பிலிம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் நடித்துள்ளனர். இதனை சந்திரகுமார் எழுதிய லாக்-அப் என்ற நாவலை தழுவி எடுத்துள்ளார் வெற்றிமாறன். குற்றமற்ற ஒருவன் போலீசார் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்று கொடூரமான விசாரணை நடத்துகிற கதை. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார், ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மணிநேரமே ஓடும் சிறப்பு திரைப்படம் இது.
காக்கா முட்டை பாணியிலான யதார்த்த சினிமா இது. சமீபத்தில் முதல் காப்பி தயாரானது.
தற்போது தனது விருது பயணத்தை தொடங்கி உள்ளது. வெனிஸ் நகரில் நடைபெறும் 72வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட விசாரணை தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறது. இந்த படவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்படுவதே கடினம். அதுவும் விசாரணை போட்டிபிரிவில் தேர்வாகி உள்ளது. அப்படி தேர்வான முதல் தமிழ் படம் இதுதான். செப்படம்பரில் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.