‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கலாபக்காதலன் படத்தை இயக்கிய இகோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் வந்தா மல. தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் என்ற புதுமுகங்களுடன் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். சாம் டி.ராஜ் இசை அமைத்துள்ளார். வட சென்னையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் பெரிய குற்றத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிற கதை. நாட்டையே நாசமாக்கும் ஒரு கும்பலிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிற கதை. "திருடு பொய்சொல்லு நாட்டை காப்பாத்து" என்பதுதான் படத்தோட மெசேஜ்.
வருகிற ஆகஸ்ட் 7ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்தின் கடைசி இணைப்பாக பராசக்தி படத்தில் சிவாஜி பாடும் "தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசையெல்லாம் காசு முன் செல்லாதடி..." என்ற பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. சரிகம நிறுவனத்திடமிருந்து முறைப்படி உரிமம் பெற்று அதனை ரீமிக்ஸ் செய்து சேர்த்துள்ளர். இந்த பாடலை கருணாநிதி எழுதியிருந்தார்.
"பராசக்தி காலத்திலும் பணம்தான் பிரதானமாக இருந்திருக்கிது, இந்தக் காலத்திலும் பணம்தான் எல்லாவற்றுக்கும் முன் நிற்கிறது. இதற்காக பாரசக்தி பாடலை அதன் மெருகு குன்றாமல் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் இகோர்.