தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த இரவு அன்று தனுஷ் மறு நாள் வரும் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, வைத்த பார்ட்டியில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா தனுஷ், அண்ணன் செல்வராகவன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த 'பார்ட்டி' புகைப்படங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. அதையடுத்து அந்த தனுஷ் நடத்திய அந்த 'பார்ட்டி' குறித்த கமெண்ட்டுகளை 'தர லோக்கல்' அளவில் ரசிகர்கள் திட்டித் தீர்த்து விட்டார்கள்.
ஒரு தேசிய விருது பெற்ற நடிகராகவும், தமிழ்த் திரையுலகத்தின் முக்கிய நட்சத்திரமான ரஜினிகாந்தின் மருமகனாகவும் இருந்து கொண்டு, தன்னுடைய பிறந்த நாள் பார்ட்டியை கொண்டாடாமல் தனுஷ் தவிர்த்திருக்கலமே என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல அந்த புகைப்படங்களில் மது உள்ளிட்ட பானங்கள் அருந்தப்பட்டுள்ளன என்பதற்கு அடையாளமாக 'கிளாஸ்' உள்ளிட்ட சில தடயங்களும் இருப்பதால் ரசிகர்கள் அதிகமாகவே கோபப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, புகை பிடிக்கும் காட்சிகளில் தனுஷ் நடிப்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், படிக்காத பாமர மக்கள் முதல் கொண்டு அனைத்து தரப்பினரும் இன்று வரை துக்கத்தில் மூழ்கியுள்ள நிலையில் தனுஷின் பார்ட்டி சமாச்சாரம் புதிய சச்சரவுகளை ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் தனுஷ் தன் மீதான புதிய விமர்சனம் குறித்து கண்டு கொள்ளாதது போல் உள்ளார். இதுவரை அது குறித்து எந்த ஒரு மறுப்பையும், கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.