'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) திடீரென ஊதியத்தை உயர்த்தியால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இதனால் 40 பெரிய படங்கள் உள்பட அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
வேலை நிறுத்தம் நடந்தபோதும் பெப்சி அமைப்புடன் தயா£ரிப்பாளர் சங்கம் தொடர்ந்து ஊதிய உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடந்த 3 நாட்களாக நடந்த தொடர் பேச்சு வார்த்தை நேற்று மாலை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள பேச்சு நடக்கும். இந்த ஆண்டு சம்பள பேச்சு சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் சண்டை இயக்குனர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கத்தினுடனான பேச்சு வார்த்தை மட்டும் நிலுவையில் உள்ளது. மற்ற சங்கங்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதால் படப்பிடிப்பு, பின்னணி இசை, டப்பிங், எடிட்டிங் பணிகளை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவையொட்டி 30ந் தேதி மட்டும் எந்த பணிகளும் நடக்காது 31ந் தேதி முதல் அனைத்து பணிகளும் தொடங்கும். சங்க உறுப்பினர்கள் சம்பள விபர பட்டியலை தயாரிப்பாளர் சங்கத்தில் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.