ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம் என்ற கேரள விநியோகஸ்தர் உடன் இணைந்து புலி படத்தை தயாரித்து வருகிறார். தன் பி.ஆர்.ஓ. என்ற அடிப்படையிலேயே அவருக்கு கால்ஷீட் கொடுத்து புலி படத்தில் நடித்தும் வருகிறார் விஜய். புலி படம் விரைவில் வெளியாக உள்ளநிலையில் தன் அடுத்தப் படங்களை திட்டமிட்டுவிட்டார் பி.டி.செல்வகுமார். புலி படத்தை அடுத்து மூன்று படங்களை தயாரிக்க இருக்கிறார். இந்தப் படங்களை தயாரிக்க உள்ள இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். இயக்குநர் ஹரி, இயக்குநர் ராஜேஷ் எம், மற்றும் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா ஆகிய மூவர்தான் அவர்கள். அவற்றில் ராஜேஷ் எம் இயக்கும் படம்தான் முதலில் தொடங்கப்பட உள்ளது. இந்தப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்து ஹரி இயக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். அனேகமாக இந்தப் படத்தில் விஜய் நடிக்கலாம் என்று தெரிகிறது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் இயக்குநரின் படத்திலும் ஜீவாதான் நடிக்கிறார். இந்த மூன்று படங்களையும் பி.டி.செல்வகுமார் தனியாகவே தயாரிக்கிறார்.