'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் சீசன் மலையாள சினிமாவிலும் தலையெடுக்க துவங்கியுள்ளது. அப்படித்தானே 'ஷட்டர்' என்கிற அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் ஜாய் மேத்யூவை, அடுத்து படம் இயக்கவிடாமல் பிசியான குணச்சித்திர நடிகராக மாற்றிவைத்து விட்டார்கள்.. அதேபோல பீக்கில் இருக்கும் இயக்குனர் ரஞ்சித்தையும் சில படங்களில் தலைகாட்ட வைத்தார்கள்.. ஆனாலும் உஷாராக அவர் இப்போது டைரக்சனில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.. இந்த சூழலில் தற்போது பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துவரும் 'அனார்கலி' படத்தில் மொத்தம் ஐந்து இயக்குனர்கள் நடிக்க இருக்கிறார்கள். இதுநாள் வரை கதாசிரியராக வலம் வந்த சாச்சி, இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.
இந்தப்படத்தில் கடற்படை அதிகாரிகள் மற்றும் சில கதாபாத்திரங்களில் நடிக்க புதுமுகங்களாக ஐந்துபேர் வேண்டும் என தேடிய இயக்குனர் சாச்சி, கடைசியில் ஐந்து இயக்குனர்களை இழுத்துவந்து நடிக்க வைத்திருக்கிறார். பிருத்விராஜ் நடித்த 'இவிடே' படத்தை இயக்கிய ஷியாம் பிரசாத், மற்றும் வி.கே.பிரகாஷ், மதுபால் ஆகிய மூவரையும் இதற்கு முன்னரே நடித்து வரும் இயக்குனர்களான ரஞ்சி பணிக்கர் மற்றும் மேஜர் ரவி ஆகிய ஐவரையும் இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். இவர்களுடன் பிஜுமேனன் மற்றும் கதாநாயகியாக மியா ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் பிருத்விராஜும் பிஜுமேனனும் கடற்படை அதிகாரிகளாக நடித்துள்ளார்கள்.