தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில், தற்போது அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழன் அன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: அப்துல் கலாம் மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாணவ சமுதாயத்தை அனைத்து நிலைகளிலும் ஊக்கப்படுத்தியவர். . அவரது ஆத்மா சாந்தியடையட்டும் உச்சநிலைக்கு சென்ற போதும் பணிவு, எளிமையாக வாழ்ந்தவர். மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியாரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், கலாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது பாக்கியம் என கூறியுள்ளார்.