'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மக்களின் ஜனாதிபதி, ஏவுகணையின் நாயகன், மாணவர்களின் எழுச்சி நாயகன் என பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரரான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரமணா படத்தில், ''ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து, அவனுக்காக அந்த குடும்பமே அழுதால் அவன் ஒரு நல்ல குடும்ப தலைவன்... ஆனால் ஒருவனுக்காக நாடே அழுகிறது என்றால்...'' என்று ஒரு வசனக்காட்சி வரும்... அந்தவசனக்காட்சி ஒரே ஒரு சொந்தக்காரர் என்றால் அப்துல் கலாம் மட்டும் தான். அவரின் மறைவுக்கு நாடே அழுகிறது.
கலாமின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிக நிறுவனங்கள் உட்பட பலர் விடுமுறை அளித்துள்ளனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் நாளை இரண்டு நேரம் காட்சிகளை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தி்ன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... ''அப்துல் கலாம் அவர்களின் மறைவு பேரிழப்பு. நாளை(ஜூலை 30) அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதையொட்டி திரையரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்துள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.